ANDHIYILA VAANAM - CHINNAVAR
ஆ: அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப்
படிக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
பெ: சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக்
கொடுக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
ஆ: ஊடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்… … ஹோ
பெ: அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப்
படிக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
ஆ: சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக்
கொடுக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
பெ: கட்டமரத் தோணிப் போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோசம்
உண்டல்லோ.…ஓ…. ஓ…. ஓ… … …
பட்டுடுத்தத் தேவையில்ல
முத்துமணி ஆசயில்ல
பாசம் நெஞ்சோடு
உண்டல்லோ…ஓ… ஓ…. ஓ… … …
ஆ: பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடுத்
தூங்காத விருந்து
பெ: நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ…..ஓ… … …
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ…ஹோ… … …
ஆ: அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப்
படிக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
பெ: சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக்
கொடுக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
ஆ: வெள்ளியலத் தாளந்தட்ட
சொல்லியொரு மேளங்கொட்ட
வேள வந்தாச்சு
கண்ணம்மா……
ஆ……ஆ……ஆ……..
மல்லியப்பூ மாலை கட்ட
மாரியிட வேளக் கிட்ட
மஞ்சம் போட்டாச்சு
பொன்னம்மா …… ஆ……ஆ……ஆ……..
பெ: கடலோரம் காத்து ஒரு கவிப் பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான
நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ
தேன்தான்
ஆ: தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் என்று கூடும் இன்றல்லோ…ஹோ… … …
பெ: அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப் படிக்கும்
… … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
ஆ: சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக்
கொடுக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
பெ: ஊடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்… …
ஆ: அந்தியில வானம் (ஹான்)
தந்தனத்தோம் போடும் (ஆஹான்)
அலையோட சிந்துப்
படிக்கும் … … …
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
பெ: சந்திரரே வாரும் (ஹோய்)
சுந்தரியப் பாரும் (ஆஹான்)
சதிராட்டம் சொல்லிக்
கொடுக்கும் … … …