MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN
ஆ: மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண
நிலாவே மானே
காவல் ஏது,
கட்டுக்கள்
ஏது, காட்டாறு பாயும் போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கொஞ்சும் பைங்கிளி
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
பெ: நீயில்லாது நித்திரை ஏது,
பாயில் வாடும்
பைங்கிளி
நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி
ஆ: நீயில்லாது நித்திரை ஏது,
பாயில் வாடும்
பைங்கிளி
நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி
பெ: மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது
நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது
ஆ: பருவ ராகம் பாட… புதிய கோலம் போட…
ஆதி அந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும் போது
பெ: மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண
நிலாவே மானே
காவல் ஏது,
கட்டுக்கள்
ஏது, காட்டாறு பாயும் போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சி பூங்கொடி
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கொஞ்சும் பைங்கிளி
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
ஆ: நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கைவரும் இன்று தோளில் தோகை ஆடினால்
பெ: நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கைவரும் இன்று தோளில் தோகை ஆடினால்
ஆ: தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு
பெ: வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழ வேண்டும்
சொந்தம் என்று பந்தங்கள் என்று நீ இன்றி யாரும் இல்லை
ஆ: மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
பெ: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
ஆ: வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
பெ: காவல் ஏது,
கட்டுக்கள்
ஏது, காட்டாறு பாயும் போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சி பூங்கொடி
ஆ: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
No comments:
Post a Comment