KOTTUKALI KOTTU - CHINNAVAR
ஆ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
ஆ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே
(♥)
… ♪…
(♥)
… ♪…
(♥)
… ♪…
(♥)
பெ: சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது....
ஆ: கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது
பெ: கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது
ஆ: கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது
பெ: ராஜராஜனும் கைக்கோர்த்த ராணியாகணும்
ஆ: காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்
பெ: ஏழு லோகம் மாலைப் போட வாழ்ந்து பார்க்கணும்
ஆ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
ஆ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே
(♥)
… ♪…
(♥)
… ♪…
(♥)
… ♪…
(♥)
ஆ: முத்துமணி மாலைப் போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்
பெ: பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்
ஆ: காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்
பெ: நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்
ஆ: மூட மூடவே என்னோட மோகம் ஏறுது
பெ: பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
ஆ: தேடத் தேடக் கோடிக் கோடி சேதி தெரியுது
பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே
ஆ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே
அ: தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே
No comments:
Post a Comment