கொட்டுக்களி கொட்டு நாயனம் – சின்னவர்

KOTTUKALI KOTTU - CHINNAVAR


ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

பெ:      வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே

பெ:      தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

() … … () … … () … … ()

பெ:      சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது....

ஆ:       கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது

பெ:      கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது

ஆ:       கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது

பெ:      ராஜராஜனும் கைக்கோர்த்த ராணியாகணும்

ஆ:       காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்

பெ:      ஏழு லோகம் மாலைப் போட வாழ்ந்து பார்க்கணும்

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

பெ:      வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆ:       கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே

பெ:      தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

() … … () … … () … … ()

ஆ:       முத்துமணி மாலைப் போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்

பெ:      பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்

ஆ:       காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்

பெ:      நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்

ஆ:       மூட மூடவே என்னோட மோகம் ஏறுது

பெ:      பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது

ஆ:       தேடத் தேடக் கோடிக் கோடி சேதி தெரியுது

பெ:      கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

ஆ:       வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

பெ:      கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா பட்டுக் களஞ்சியமே

அ:        தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...