கொடியிலே - கடலோரக் கவிதைகள்

KODIYILE - KADALORA KAVITHAIGAL


ஆ:    கொடியிலே
மல்லியப்பூ
மணக்குதே மா...னே
எடுக்கவா
தொடுக்கவா
துடிக்கிறேன் நா...னே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெ:   கொடியிலே
மல்லியப்பூ
மணக்குதே மா...னே
கொடுக்கவா
தடுக்கவா
தவிக்கிறேன் நா...னே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

பெ:   மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடப் போடும்

ஆ:    நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி கா….யும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சே….ரும்

பெ:   பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரா

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

ஆ:    பறக்கும் தெசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பெ:   பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு

ஆ:    காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே

பெ:   தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே
மல்லியப்பூ
மணக்குதே மா...னே
கொடுக்கவா
தடுக்கவா
தவிக்கிறேன் நா...னே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ:    கொடியிலே
மல்லியப்பூ
மணக்குதே மா...னே
எடுக்கவா
தொடுக்கவா
துடிக்கிறேன் நா...னே


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...