KAADHALA KAADHALA -
SURYA VAMSAM
பெ: ஹே…..ஹே.....ஹே ஹே……….. ஹே ஹே ஹே
… ♪♪…
பெ: காதலா… காதலா… காதலின் சாரலா…
காதலா…
காதலா…
காதலின்
சாரலா…
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்
ஆ: காதலா… காதலா… காதலின் சாரலா…
)( … ♪… )( … ♪♪… )( … ♪… )(
பெ: இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
ஆ: இதற்கு
முன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை
பெ: தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
ஆ: கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்…
பெ: ஏனிந்த மாற்றமோ
ஆ: காதலா… காதலா… காதலின் சாரலா…
)( … ♪… )( …
♪♪… )( … ♪… )(
ஆ: பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பெ: பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
ஆ: பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன
பெ: மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன
ஆ: ஏனிந்த மாற்றமோ
காதலா… காதலா… காதலின் சாரலா…
காதலா… காதலா… காதலின் சாரலா…
பெ: தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
ஆ: கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
பெ: மாறினேன் மீன்களாய்
ஆ: காதலா… காதலா… காதலின் சாரலா…
No comments:
Post a Comment