மெதுவா மெதுவா - அண்ணா நகர் முதல் தெரு

MEDHUVAA MEDHUVAA – ANNAA NAGAR MUDHAL THERU


பெ:        மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

() … ♪… () … ♪… () … ♪… ()

ஆ:         உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
() … ♪… ()
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

பெ:        இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது

ஆ:     ஆ….மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...

பெ:        ….மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
() … ♪… () … ♪… () … ♪… ()

ஆ:         இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே

பெ:        ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
() … ♪… ()
ஆ:         ஹா….அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு

பெ:        ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு

ஆ:         ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்

பெ:        இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

ஆ:         ….மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

பெ:        மலரும் மலரும் புது தாளம் போட்டு

ஆ:         புதுசா புதுசா அதை காதில் கேட்டு

பெ:        புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...

இரு:     ஆஹாஆஹா ஆஹா…….


தந்தன தந்தன தை மாசம் – தவசி

THANTHANA THANTHANA THAI MAASAM - THAVASI


பெ:        இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது றெக்கை கெட்டி பறக்குதும்மா
றெக்கை கெட்டி பறக்குதும்மா
பெ:        இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெக்கம் விட்டு இணைந்ததம்மா

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:     தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪

பெ:    சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்

ஆ:     என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்

பெ:    தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது இப்பதான்

ஆ:     ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி

பெ:    ஐயா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

ஆ:     தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்

பெ:    சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

பெ:    ஆண் யாரோ பெண் யாரோ
தெரிய வேண்டுமா நீ சொல்லு

ஆ:     யார் மீது யார் யாரோ
புரிய வேண்டுமா நீ சொல்லு

பெ:    ஏன் காது ரெண்டும் கூச
வாய் சொன்னதென்ன நீ சொல்

ஆ:     அந்த நேரம் என்ன பேச
அறியாது போலே நீ சொல்

பெ:    ஒரு பூவும் அறியாமல்
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்

ஆ:     இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா

பெ:    இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா

ஆ:     தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்

பெ:    சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

பெ:    ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட

ஆ:     அன்பே உன் கண் போதும்
எனது உயிரையும் பூட்டு

பெ:    உன் கண்களோடு நானும்
முகம் பார்த்து வாழ வேண்டும்

ஆ:     உன்னை பார்த்து பார்த்து வாழ
நக கண்ணில் பார்வை வேண்டும்

பெ:    உன் கையில் உயிர் வாழ்ந்தான்
இது பாவமா வரமா புரியவில்லை

ஆ:     உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்

பெ:    உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்க்கங்கள்

ஆ:     தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்

பெ:    சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்

ஆ:     என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்

பெ:    தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது இப்பதான்

ஆ:     ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி

பெ:    ஐயா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி



பூத்து பூத்து குலுங்குதடி - கும்பக்கரை தங்கையா

POOTHTHU POOTHTHU – KUMBAKKARAI THANGAIYAA


பெ:   ஆ……………..ஹா………….………………ஹா……….

ஆ:    பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

பெ:   ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

ஆ:    பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு

… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***… ♪♪… ***… ♪♪…

பெ:   வைக்காத செந்தூரம் தான்
வச்சி வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ தந்தா என்ன முத்தாரம் தான்

ஆ:    வண்டாடும் கண்ணோரம் தான்
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்ததேனம்மா கொண்டாட தான் இந்நேரம் தான்

பெ:   மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மா…..மன் நீ

ஆ:    மேளம் ஒரு இடி இடிக்கிது
வானம் புது கொட புடிக்கிது வா வா வா மானே

பெ:   பூத்து பூத்து குலுங்குதையா பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஆ:    ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு

பெ:   ஆஆஆஆஆஆஆஆஆஆஆஹாஹாஹா

… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***… ♪♪… ***… ♪♪…

ஆ:    பட்டோட பொன்னாட தான்
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே

பெ:   தோலோடு தோலாகத் தான்
மேலோட மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்

ஆ:    செம்மெனியா செந்தாழம்பூவா
அது உன் மேனியா பொன் மேனியா

பெ:   பார்த்தா உடல் சிலுசிலுக்குது
பார்வ பட கிளுகிளுக்குது வா வா வா மாமா

ஆ:    பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் ஹஹஹா
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

பெ:   ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

ஆ:    பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்துப் பாத்து மனசுக்குள்ள நோவு


மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...