NAAN
VAANAVILAIYE PARTHEN - MOOVENDHAR
ஒஹொஹோ ……………ஹொஹொஹோ
ஒஹொஹோ ……………ஹொஹொஹோ
ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹோ
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஒஹொஹோ ……………ஹொஹொஹோ
(♥) … ♪… (♥) … ♪… (♥) … ♪… (♥)
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
… ♪… (♥) … ♪…
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
(♥) … ♪… (♥) … ♪… (♥) … ♪… (♥)
சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாறனின் நெஞ்சமா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
… ♪… (♥) … ♪…
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஒஹொஹோ ……………ஹொஹொஹோ
ஒஹொஹோ ……………ஹொஹொஹோ
ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹோ
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
No comments:
Post a Comment