GURUVAAYOORAPPA – PUDHU PUDHU ARTHANGAL
ஆ: குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
பெ: குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ஆ: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
பெ: குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪
* ♪
ஆ: தேனாற்றம்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
பெ: தினந்தோறும் இரவில் நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
ஆ: அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்
பெ: வா வா என் தேவா செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே
ஆ: குருவாயூரப்போ…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
♪ * ♪ * ♪ * ♪ * ♪♪ * ♪ * ♪ * ♪
* ♪
பெ: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
ஆ: எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பெ: பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
ஆ: மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே
குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
பெ: குருவாயூரப்பா…. குருவாயூரப்பா….
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ஆ: ராதை உனக்குச் சொன்ன வே….தமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
பெ: குருவாயூரப்பா…. குருவாயூரப்பா…. (ஹஹஹஹான்)
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ஆ: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
No comments:
Post a Comment