INDHA MAAN - KARAGAATTAKAARAN
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦
ஆ: வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்து தான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ: கண்மணியே...
பெ: சந்திக்க வேண்டும் தேவனே ஆ: என்னுயிரே...
♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦ … ♪… ♦
பெ: பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான் ஆ: பக்கம் வந்து தான்
பெ: சிந்து பாடும்
இந்த மான் ஆ: எந்தன்
சொந்த மான்
பெ: பக்கம் வந்து தான் ஆ: சிந்து
பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே பெ: என்னவனே...
No comments:
Post a Comment