இளங்காத்து வீசுதே - பிதாமகன்

ELANGAATHU VEESUDHEY - PITHAMAGAN


:        எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

பெ:       கரும்பாற மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே

:        மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே

பெ:       வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

பெ:       பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

:        அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

பெ:       உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

:        எளங்காத்து வீசுதே எச போல பேசுதே

பெ:       வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

:         மனசுல என்ன ஆகாயம்
தெனம்தெனம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா

பெ:       வெத வெதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரு எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு

:        ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலநதி போல

பெ:       கரும்பாற மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே

:        வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே

பெ:       புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே

… ♪♪… … ♪♪…


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...