செங்குருவி செங்குருவி – திருமூர்த்தி

SENGURUVI SENGURUVI - THIRUMOORTHI


ஆ:    சிறுவாணி தண்ணியைப் போல் சிலு சில்லுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரம் போல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணி சிவப்பாட்டாம் மணிக்கண்ணம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்து பாடி வரும்

♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:    செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கு:     செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

ஆ:    ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா

கு:     முத்திரைய போடம்மா முத்தமிட்டு பாடம்மா

ஆ:        வெட்கமெல்லாம் மூட்ட கட்டி வச்சா என்ன ஓரமா

பெ:    செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:    வெண்ப்பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச நளினமான மாலையிது
கு:     தன தனனனான தானனனா தன தனனனான தானனனா

பெ:    சென்னி மலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
கு:     தன தனனனான தானனனா தன தனனனான தானனனா

ஆ:    ஹா... ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்கை துணி நானாக (ஹா)
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்சா ஆகாதா

பெ:    ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்கை கட்டி எட்டு திக்கும் போகாதா

ஆ:    அடி சீனி சக்கரையே (அஹா) எட்டி நீயும் நிக்கிறியே (ஹா)
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே

கு:     செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

கு:     நனனனா நனன நனனனா நானான நனனனா நனன நனனனா
நனனனா நானான நனனனா நானான

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

பெ:    கள்ளழகர் வைகையில் கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்துகிட்டு பருவ ராகம் பாடணுமே
கு:     தன தனனனான தானனனா தன தனனனான தானனனா

ஆ:    சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் புடவையில் ஒளிஞ்சுக்கிட்டு நெனச்ச தாளம் போடணுமே
கு:     தன தனனனான தானனனா தன தனனனான தானனனா

பெ:    ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே (ஹா)
ஒன்னாகி கூடும்போது ஊர் முழுக்க பாக்காதா

ஆ:    ஆஹ்...பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேர்க்காதா

பெ:    என்ன வாட்ட எண்ணுறியே (ஹஹான்) கைகோர்த்து பின்னுறியே (ஹான்)
உன் பாட்ட பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

ஆ:    செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கு:     செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

பெ:    ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆர்வமா

கு:     முத்திரைய போடம்மா முத்தமிட்டு பாடம்மா

ஆ:    வெட்கமெல்லாம் மூட்ட கட்டி வச்சா என்ன ஓரமா

கு:     செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலக்கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி



No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...