நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி

NAAN YERIKKARAI – CHINNA THAAYI


ஆ:           நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசைப் பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோனலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

பெ:           நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து

பெ.கு:     மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

பெ:          அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடி போன பின்னும்

பெ.கு:     வீடு போயி சேர்ந்திடத்தான் தோனலே

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பெ:          நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோனலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
நிக்கிறேனே இக்கரையிலே

ஆ:           நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசைப் பார்த்திருந்து

ஆ.கு:      ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே

ஆ:           மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்

ஆ.கு:      சோறு தண்ணி வேணுமுன்னு தோனலே

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

ஆ:           தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

பெ:          உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒன்னு சொன்னேனே

ஆ:           கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

பெ:          நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

ஆ:           மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோனலே

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பெ:          மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா முச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ

ஆ:           கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ண காட்டி மையல் தீரப்பேசாதோ

பெ:          உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

ஆ:           நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைப்பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோனலே

பெ:          என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

ஆ:           நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைப் பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

பெ:          அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோனலே

  

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...