VALLI VALLI ENA VANDHAN - KIZHAKKU
VAASAL
ஆ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா……..ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தா……..ன்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும்
சொல்லித்தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி
என்று தினமும்
முல்லைச்சரம் கொண்டு
சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா……ன் ஹோ
புள்ளி வைத்து புள்ளி
போட்டான்
புது கோலம்தா……ன்
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
ஆ: வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வடித்த வாசப்பூ
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா
பெ: இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும் கன்னிப்பூ
வந்துதான் வந்துதான் தட்டுமா
ஆ: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா
பெ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா……….ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தா……..ன்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும்
சொல்லித்தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும்
முல்லைச்சரம் கொண்டு
சூடினான்
ஆ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா……….ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தா……ன்
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: செந்தாழ் புல்லாங்குழல்
வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
ஆ: மன்னன் சொல்லும் கவி
மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
ஆ: மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என்கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே
ஆ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா……..ன்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தா……..ன்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும்
சொல்லித்தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி
என்று தினமும்
முல்லைச்சரம் கொண்டு
சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா………ன் ஹோ ஹோ
புள்ளி வைத்து புள்ளி
போட்டான்
புது கோலம்தா……..ன்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும்
சொல்லித்தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும்
முல்லைச்சரம் கொண்டு
சூடினான்
ஆ: வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தா…….ன்
பெ: புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தா…….ன்
No comments:
Post a Comment