KOONDUKULLA ENNA VACHCHI – CHINNA GOUNDER
ஆ: கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
(*) … ♪♪…
(*) … ♪♪… (*) … ♪♪… (*)
பெ: கண்ணு வலது கண்ணு தானா துடிசுதுன்னா
எதோ நடக்குமின்னு பேச்சு
ஆ: மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கதை முடிஞ்சு போச்சு
பெ: ஈசான மூலையில லேசான பல்லி சத்தம்
மாமன் பேரை சொல்லி பேசுது
ஆ: ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு
ஊரும் சேந்து என்னை ஏசுது
பெ: மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
ஆ: கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
பெ: கூண்டுக்குள்ள ஒன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
(*) … ♪♪…
(*) … ♪♪… (*) … ♪♪… (*)
ஆ: தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்ன தினம் பாடும்
பெ: கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதைய தினம் பேசும்
ஆ: பொள்ளாச்சி சந்தையிலே கொண்டாந்த சேலையிலே
சாயம் இன்னும் விட்டு போகல
பெ: பண்ணாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆ: மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
பெ: கூண்டுக்குள்ள ஒன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
ஆ: கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
பெ: என் மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
ஆ: அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
No comments:
Post a Comment