PONGALO PONGAL – MAHAA NADHI
ஆ.கு: பொங்கலோ பொங்கல்….
பெ.கு: பொங்கலோ பொங்கல்….
ஆ.கு: பொங்கலோ பொங்கல்….
பெ.கு: பொங்கலோ பொங்கல்….
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ: தை பொங்கலும் வந்தது பாலு பொங்குது பாட்டு சொல்லடியோ
கு: தை பொங்கலும் வந்தது பாலு பொங்குது பாட்டு சொல்லடியோ
பெ: வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
கு: வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
பெ: இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
கு: இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
பெ: இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
கு: இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஆ.கு: ஹே தைய தியன் தக்கு திய தக்கு
பெ.கு: ஹே தைய தியன் தக்கு திய தக்கு
ஆ.கு: ஹே தைய தியன் தக்கு திய தக்கு
பெ.கு: ஹே தைய தியன் தக்கு திய தக்கு
கு: தை பொங்கலும் வந்தது பாலு பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ: முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி
நீரால
சேத்தோட சேர்ந்த விதை நாத்து
விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து
வராதா
செவ்வாழ செங்கரும்பு சாதி
மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும்
இல்லை வாட்டம் தான்
கு: நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
பெ: தை பொங்கலும் வந்தது பாலு பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை
போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை
கட்டிடும் தெய்வ மங்கையடி
No comments:
Post a Comment