குத்தால குயிலே – திருமதி பழனிச்சாமி

KUTHAALA KUYILE - THIRUMADHI PAZHANISAAMI


ஆ:      குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......
சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா......
என்ன தப்பாக எண்ணலாமா......

பெ:     எண்ணம் போல வந்த வாழ்வு இந்த நேரம் வந்த போது

ஆ:      குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......

பெ:     கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......

)( … ♪♪… )( … ♪♪… )( … ♪♪… )(

ஆ:      போகாதப் பள்ளியற ஏதேதோப் பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோஷமா
வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்ல
வேண்டும் பாவி நான் தானம்மா

பெ:     வாராத எண்ணமில்லக் கூடாத வண்ணமில்ல
வாமா மாமா கையோரமா 
பூமாலக் கட்டவில்லப் பொன்னாரம் பூட்டவில்ல
ஏம்மாக் கூட நாளாகும்

ஆ:      ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழிப் பார்வை ஒன்னாகும்

பெ:     காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் எனும் நோயில் புண்ணாகும்

ஆ:      மொழி நீதானம்மா சொல்ல நான்தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா

பெ:     ஆஹாஹா...
ஆ:      ஆஹா...
பெ:     ஆஹா...ஆஹாஹா...
ஆ:      ஆ......ஹ.......
குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......

பெ:   ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......

)( … ♪♪… )( … ♪♪… )( … ♪♪… )(

ஆ:      ஏழேழு ஜென்மம் தொட்டு இல்லாத வண்ணம் தொட்டு 
நானே செய்தப் பொன்னோவியம் 
வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து 
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்

பெ:     ஏடோடு வந்த சொந்தம் எப்போதும் தந்த பந்தம் 
இன்றும் என்றும் ஒன்றானது 
பூ ஒன்று மாலை இன்று தோளோடு சூடிக் கொண்டு 
கூட்டும் காலம் உண்டானது

ஆ:      எட்டுத் திசை எங்கெங்கும் கொண்டாட
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட

பெ:     ஒட்டும் வண்ணப் பூவோடுப் பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட

ஆ:      இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா

பெ:     ஆஹாஹா...
ஆ:      ஆஹா...
பெ:     ஆஹா...ஆஹாஹா...
ஆ:      ஆ......ஹ.......
குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......

பெ:     எண்ணம் போல வந்த வாழ்வு இந்த நேரம் வந்த போது.......

ஆ:      குத்தாலக் குயிலேக் குத்தாலக் குயிலே
ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......

பெ:     ஒக்காந்துப் பேசலாமா......
கொஞ்சம் ஒக்காந்துப் பேசலாமா......


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...