அம்மன் கோயில் வாசலிலே - திருமதி பழநிச்சாமி

AMMAN KOVIL VAASALILE – THIRUMADHI PAZHANISAAMI


ஆ:     ஹே ஹே அரரரரரர ஹே ஹே
ஹே ஹே அரரரரரர ஹே ஹே
…….………..
அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணியத் தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம்ஜோடின்னு ஆவோமா
ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

1:    மச்சான் ஒன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா
வெச்சாலும் நல்ல குறி நம்மூரு பச்சக்கிளி சிக்காதையா

2:    அண்ணாச்சி விட்டரதம் என்னாளும் வெற்றிபெறும் நிக்காதையா

1:    முக்காடு போட்டுக்கிட்டு ஒன் வாயப் பொத்திக்கிட்டு ஒட்காரையா

ஆ:     வட்டம் போடும் வாலிபக் காத்து திட்டம் போட்டுப் பாடாதா
பாட்டு கேட்டு வாசனைப் பூவும் பக்கம் வந்து ஆடாதா
கிட்டாதது கிட்டும் வர மல்லாடுறேன் கில்லாடி நான்
ஹே.....அம்

பெ:    அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
ஒரு பூரதம் சுத்தி வருது
அது பொன்மணியத் தேடி வருது
இது ஆகாத வேல தான் வந்து மாட்டாது சேல தான்
ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:    எட்டாத கொம்பு பழம் கிட்டாது குள்ளநரி அந்நாளிலே
ச்சீ ச்சீனு சொல்லிப்புட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே......ஏ....ஏ

ஆ:     வைக்காம வத்திக்குச்சி பக்குன்னு பத்திக்கிச்சி பெண்ணாசதான்
பொண்டாட்டி வேணுமிப்ப கொண்டான்னு கேட்குதடி என்னாசதான்

1:    லவ்வூ பண்ணும் நாடகம் எல்லாம் இவ்வூர் மண்ணில் வேகாது
சைக்குள் ஓட்டி சைட் அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது

2:    அண்ணாச்சிதான் கையவச்சா மண்ணானதும் பொன்னாகிடும் ஹோய்

ஆ:     ஹே அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணியத் தேடி வருது

பெ:    இது ஆகாத வேல தான் வந்து மாட்டாது சேல தான்

ஆ:     ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...