போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்

POGUTHEY POGUTHEY - KADALORA KAVITHAIGAL


போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே உறவும் இல்லையே

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மா…..யம் தா……னா

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

… ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪… … ♪♪…

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பா……சம் ஏ……து

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே உறவும் இல்லையே

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...