KAADHORAM LOLAAKKU - CHINNA MAPPILLAI
பெ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு எனைப் பின்னுதையா
ஆ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனைப்
பின்னுதடி
பெ: ஓன் முகத்தப் பாக்கயில ஏம்முகத்த
நான் மறந்தேன்
ஆ: காதோரம் லோலாக்கு கத
சொல்லுதடி
காதோரம் லோலாக்கு
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா
காத்திருந்தேன்
நான் விரும்பும்
மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா
காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலத்
தேடி
கண்டேனே நானும்
எனக்கொரு ஜோடி
ஆ: உன்னாட்டம் தான் தங்கத்தேரு
கண்டதில்ல எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த
வள்ளி
பெ: நீ தொடத் தானே நான் பொறந்தேன்
நாள் ஒரு வண்ணம் நான் வளர்ந்தேன்
ஆ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனைப் பின்னுதடி
பெ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காதோரம் லோலாக்கு
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: வானவில்ல வெலக் கொடுத்து
வாங்கிடத்தான்
காசிருக்கு
வானவில்ல வெலக்
கொடுத்து
வாங்கிடத்தான்
காசிருக்கு
ஏன் கூட உன் போல் ஓவியப்
பாவை
இல்லாமல் போனால் நான்
ஒரு ஏழை
பெ: எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல் அல்லி
கட்டு
மேலும் கீழும் மெல்ல
தொட்டு
மேளம் போலெ என்ன தட்டு
ஆ: நான் அதற்காக காத்திருந்தேன்
நீ வரும் பாதை பார்த்திருந்தேன்
பெ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு எனைப் பின்னுதையா
ஆ: ஓன் முகத்தப் பாக்கயில ஏம்முகத்த நான்
மறந்தேன்
பெ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு எனைப் பின்னுதையா
ஆ: காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனைப்
பின்னுதடி
No comments:
Post a Comment