இறைவனிடம் கையேந்துங்கள்


IRAIVANIDAM KAIYENDHUNGAL


இறைவனிடம் கையேந்துங்கள்,
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமை உடன் கேட்டு பாருங்கள்,
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

இறைவனிடம் கையேந்துங்கள்,
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

இறைவனிடம் கையேந்துங்கள்,
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளி தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்
அன்பு நோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்,
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவர்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்

இறைவனிடம் கையேந்துங்கள்,
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
 

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...