SORGAME ENDRALUM - OORU VITTU OORU VANDHU
ஆ: ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்கமே என்றாலும் அது
நம்மூரப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும்
பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்கமே என்றாலும் அது
நம்மூரப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா...
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***…
♪♪… ***… ♪♪…
பெ: ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
ஆ: பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
பெ: வெத்தலைய மடிச்சு மாமன் அதக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஆ: ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடயில்லையே
பெ: இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
ஆ: அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
பெ: ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
ஆ: சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல்
இனித்திடுமா
சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
பெ: தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா..
தந்தான நா..நா தனதந்த
நா..நா....
… ♪♪… *** … ♪♪… ***… ♪♪… ***…
♪♪… ***… ♪♪…
ஆ: மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லயே
பெ: ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேட இல்லயே
ஆ: காள ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெ: தோழிகள அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஆ: ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
பெ: இத எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்ல
ஆ: நம்மூரப் போல ஊரும் இல்ல
பெ: சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல்
இனித்திடுமா
ஆ: சொர்கமே என்றாலும்
இரு: அது நம்மூரப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும்
இரு: அது நம் நாட்டுக்கீடாகுமா
No comments:
Post a Comment