KUYILE KUYILE POONGUYILE - AANPAAVAM
ஆ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா
பெ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா
ஆ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…….
பெ: பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…….
ஆ: சிட்டுக்கொரு பட்டுத் துணி காட்டித் தரவா………
மொட்டுக்கென முத்துச் சரம் கொட்டித் தரவா…….
பெ: ஓட்டிக்கிற கட்டடிக்கிற சிட்டுக் குருவி…….
கட்டுக்கதை விட்டு ஒரு பாட்டா படிக்கும்……
ஆ: நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
பெ: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை
ஆ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
பெ: ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா
ஆ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
பெ: ராசாத்தி ராசனத் தான்
கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசா பட்டா............ஆ
ஆ: ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா............ஆ
பெ: அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிப்புட்டான்
இன்னைக்காத அழிச்சா அவன் எழுதப்போறான்
ஆ: பெண்ணே பழி அவன் மேல சொல்லாதடி
ஆண்பாவம் பொல்லாது கொள்ளாதடி
பெ: தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
ஆ: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை
பெ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஆ: ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா
பெ: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
No comments:
Post a Comment