மானுத்து மந்தையில - கிழக்கு சீமையிலே


MAANUTHU MANDHAYILE – KIZHAKKU SEEMAYILE


:         மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....

பெ.கு:   தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……

:         சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

கு:          சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

:         மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....

பெ.கு:   தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……

கு:          சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´

:         நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

பெ.கு:   மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

:         பச்ச ஒடம்புக்காரி……. பாத்து நடக்கச்சொல்லுங்க

பெ.கு:   பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

:         மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
´*•.¸♫♪¸.•*´
மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....

பெ.கு:   தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……

:         சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

கு:          சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

´*•.¸♫♪´*•.¸♫♪¸.•*´♫♪¸.•*´

:         ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சிப் போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

கு:          காராம்பசு ஓட்டி வாராண்டித் தாய் மாமன்

:         வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பெ.கு:   பச்ச ஒடம்புக்காரிப் பாத்து நடக்கச்சொல்லுங்க

:          எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
´*•.¸♫♪¸.•*´
மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே....
(அய்யோ)
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே....

பெ.கு:   தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி,
அவன்….தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி……

:         சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே
(ஹோய்)

கு:          சீரு சொமந்த…… சாதி சனமே….. ஆறு கடந்தா…. ஊரு வருமே

:         மானுத்து மந்தையில மாங்குட்டிப் பெத்த மயிலே…..
(போடு)
பொட்டப்புள்ளப் பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…..


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...